யாழ் களக் கிறுக்கல்கள் - VI

கிறுக்கல் 17:

இருட்டுக்குள்
இருப்பதாக சொல்பவர்களே
ஒரு விளக்கேற்றும்
அறிவில்லையா?
'அறிவு' இருட்டுக்குள்
இருக்குமெனின்
சிந்தனைத் திரிதூண்டியை
திருகுங்கள்
அடுத்தவரின்
அனுதாபத்திற்காக
ஏங்கின்றீர்கள்
வேண்டாமே...
இந்தச் சமூகம்
வேதனைப்படும் போதும்
வேர்வை வடிக்கும் போதும்
வேடிக்கை பார்பதோடு சரி
தொட்டு அணைத்து
தோளில் சாய்த்து
ஆறுதல் தராது
அறிவுரைகள் தருவதில்
என்ன பயன்?
வேண்டாம் வெங்காயமும்
இந்த வேடிக்கைச் சமூகமும்!

 

-----------------

கிறுக்கல் 18: 

எப்போது
கண்ணே
என் தேசம் விடியும்?

கடிகார முள்
சுற்றுகிறதே தவிர
எம் வாழ்க்கை
இன்னும்
சூனியமாய்...

சுழன்றடித்த காற்றில்
பறந்து போன
சருகுகள் போல
ஆளுக்கு ஒரு பக்கம்!

இன்று வரும்
நாளை வரும்
என்று சொன்னாலும்
என்று வரும்
என்று தெரியாததால்
எம் நம்பிக்கையின்
நாடித் துடிப்பும்
தளர்கிறது கண்ணே...

முற்றத்து மண்ணில்
பாயின்றிப் படுத்தாலும்
பயங்கரமாய் தூக்கம்
வருமே...
குமுறி அழுகின்றேனடி
குங்குமப் பூக் கன்னம்
தடவி...
குவிகின்ற இதழ் தொட்டு
முத்தமிட துடிக்கின்றதே
என் மனது
நடக்குமாடி கண்ணே?
அடுக்குமாடியில் குடியிருந்து
அங்கேயும் இங்கேயும்
விழியசைந்தாலும்
ஒரு மையத்தில்
வட்டமிடுதே நினைவெல்லாம்
உற்றுப் பார்த்தால்
அது நீயும் என் தேசமும்!

 

-----------------

கிறுக்கல் 19:

வழி என்னவென்று கேட்டு
விழி மூடும் பாவாய்
கவி நான் வரைய
கருவாக நீயே ஆவாய்
கரையும் சில திங்கள்
காத்திருக்கப்
புரியும் என்னுள்ளம்
புரிந்துவிட்டால்
சொர்க்கம் உனதில்லம்!

சுந்தரியே புரிவாயா?
புரிந்து பின் என்மேல்
கருணை மழை
பொழிவாயோ?

மந்திரியாய் நீயாவாய்
மன்னனாக நானாவேன்
நீதிகள் எனக்குச் சொல்வாய்
நிறைவாக அமையுமடி
எம்மரசு!

Comments

Popular posts from this blog

அத்தை மகள்

ஒலி வடிவம்

கவிதைகள் - அட்டவணை