யாழ் களக் கிறுக்கல்கள் - III
கிறுக்கல்கள் தொடர்கிறது...
கிறுக்கல் 08:
வாழ்க்கை
ஒன்றும்
புதிரில்லை
நாளைய ஏக்கம்
நேற்றை கவலை
பலருக்கு...
இன்று, இந்த நிமிஷம்
நாமிருப்பதே
நிஜம்..
இன்றையப் பொழுதைக்
கொண்டாடுங்கள்
சந்தோஷங்களை
ஒத்தி வைக்க
இது ஒன்றும்
கூட்டத் தொடரில்லை!
வாருங்கள்
நண்பர்களே
வசந்தங்கள்
காத்திருப்பதில்லை
வசந்தாக்களும்
கூடத் தான்!!!
-----------------
கிறுக்கல் 09:
என்னவளே
என்னிதயம்
ஆள்பவளே
சின்னவளே
கறுப்பான
என் மேல்
மையல் கொண்டவளே
இதயப் பொய்கையில்
அடிக்கடி அமிர்தம்
வார்பவளே
வருவேன் மீண்டுமென
வார்த்தையால்
வருடிச் சென்றவளே
எங்கையடி சென்றாய்
என்னை விட்டு...?
வானை விட்டு
நிலவு பிரிந்தால்
வானென்ன செய்யும்
வாடி என் பெண்ணே
முகில் துப்பட்டாவால்
உன் மேனி மூடி
தொட்டணைக்க
உள்ளம் துடிக்குதடி!
-----------------
கிறுக்கல் 10:
பிடித்துள்ளது
என்று சொன்னாய்
நீ ...
பிளேன் ஏறி
இங்கு வந்த பின்
பிடிக்கவில்லை
என்றாய்
வெறும்
தோற்ற மயக்கத்தில்
தொலைந்து
போனதோ
உன் காதல்?
Comments