யாழ் களக் கிறுக்கல்கள் - II

மேலும் சிறு கிறுக்கல்கள்...

கிறுக்கல் 04:

முரசு கொட்டி முழங்கடா
அரசு கட்டில் நடுங்கட்டும்
பரிசு தரப்போகிறான்
தலைவன்
கொலுசு கட்டி ஆடடி
குழந்தாய்...
கொக்கரிக்கும் கோழிகள்
சமையலாகப் போகுது!


சிவப்புத் தோல் போர்த்திய
நரியடா மகிந்தன் - அவன்
திட்டம் எல்லாம்
மண்ணாகப் போகுது
பண்ணாகப் / Fun ஆகப் பாட்டெழு
தம்பி...
பலதேசம் கேட்கப் பாடலாம்
ஒரு தேசம் தமிழனுக்கென்று
வருமடா நாளை
அப்போது ஓடிப் போன
கூட்டமெல்லாம்
வந்தாட்டுமடா வாலை!

 

-----------------

கிறுக்கல் 05:

தெரியாதோ கண்ணே
சேதி?
வானில் மறுபடியும்
புலிப் பாய்ந்த கதை...
கிலி பிடித்து
கிடக்குதடி
சிங்களச் சேனை
கெதியாக ஈழம்
வரப்போகுதடி
துணிவோடு இரடி
எந்த நாடு விசா
மறுத்தாலும் - எம்
ஈழமிருக்கடி...!

 

-----------------

கிறுக்கல் 06:

இருக்கிறேன் நான்
இங்கே என்று
சொல்லத்தான்
ஆசை...
சொல்லித் தெரிவதில்லையே
பாசம்...
மெளனமாகி
சோகங்களை எனக்குள்
சிலுவையாக்குகின்றேன்
யார் வருவார்
சேர்ந்து தோள்
கொடுக்க?
தேளாகி என்னைக்
கடிக்கின்றபோதெல்லாம்
உன் மனம் ஏனோ
மறந்துபோகிறது
மருந்து போடவும்
நீ தான்
வரவேணும் என்பதை!

 

-----------------

கிறுக்கல் 07:

காதலித்தாய்
என்று கலக்கமின்றி
சொல்கிறாயே
மைந்தா...
இந்தா
இதைப் பிடி
என்னவென்று படி
வடிவான உன்
அத்தை மகள்
உனக்குத் தானென்று
கொம்மான்
எழுதியுள்ளார்
அம்'மான்'
உனக்குக் கிடைத்தால்
எம் பெருமான்
ஆசியிது வென்பேன்!
சும்மாவா தம்பி
சுருட்ட எவ்வளவோ
சொத்திருக்கு அவளிடம்
'சுருட்டை' எவ்வளவு
நாள் நானும்
சுருட்டுவது?
கையிரண்டைப்
பிசையாமல்
கடகடவென்றே
உன் நெஞ்சத்தில்
உள்ள சேதி
சொல்வாய்...
மைந்தா

 

மேலும் கிறுக்குவேன்...

Comments

Popular posts from this blog

அத்தை மகள்

கவிதைகள் - அட்டவணை

ஒலி வடிவம்