Posts

Showing posts from January, 2008

கண்டதென்ன...?

என்னடா நீ நாலுக்கு ஐந்தடி அறையில் கொண்டாட்டம் ஏதுவுமின்றி கொல்கின்றாய் நிமிடங்களை! வெளிநாடு வந்துமென்ன கண்டாய் இங்கே? ஒருநாடு உனக்கில்லாது குளிர்நாடு வந்து குமைகின்றாய் உள்ளே! காலைச் சூரியன் பார்த்ததுண்டா? கடலலை கால் நனைக்க மகிழ்ந்து சிரித்ததுண்டா? போடா... போ... சூரியனுக்கு முன்னெழுந்து நடுங்கும் குளிரில் வீதியில் நடைபயின்று வேலைக்குப் போனால் நடுநிசியில் வீடு திரும்பி மீண்டும் மறுநாள் அதே செக்குமாட்டு வாழ்க்கை...! கேட்டால் நாளை சந்தோசத்திற்கென்பாய்! உனை கேலியாய் பார்த்துச் சிரிக்கும் சமகாலத்தைக் கவனி... கண்களில் மின்னும் தங்கையின் கல்யாணக் கனவு... கஸ்டத்தில் ஆடும் குடும்பத்தின் வாழ்க்கைப் படகு... எல்லாம் சரி... உன் முகமூடி கழட்டி உண்மை நிலை உரை சமாந்திரக் கோடு கிழி குடும்பத்தோடு உன் வாழ்வும் பயணிக்க வேண்டுமடா...! வெளிநாட்டில் இருப்பது கெளரவம் என்று நம்நாட்டில் நினைப்பு... யூரோவில் பவுண்சில் நீ அனுப்பும் காசில் இந்திரலோகத்தின் அதிபதியாய் நீ தெரிவாய்! யாரேனும் இங்கு வந்து நாம் படும் துன்பம் அறிந்ததுண்டா? உள்ளுக்குள் ஏதோவொரு சோகச் சிலுவையை மனசு சுமப்பது புரியுமா?

கலங்காதே கண்ணே...

எங்கிருந்தோ எனை ஆழ்கின்ற என்னவளே... முன்னொருபோதும் இத்தனை சந்தோசம் அடைந்தவனில்லை நான்! பின்பு ஒருநாள் தேவதை நீ வருவாய் எனும் அசரீரி ஏதும் கேட்டதில்லை... ஆனாலும் உன் தரிசனம் கிடைத்தது... காதலெனும் புதுசுகம் மலர்ந்தது! நீ இல்லாத போது வலிக்கின்ற நெஞ்சம் அருகில் வந்தபின் கவனிப்பதே இல்லை பிரிவின் போது தான் உள்ளிருக்கும் காதல் விழித்துக் கொள்கிறது! கண்ணே கலங்காதே... நகருகின்ற நாட்களில் எம் வாழ்வு எங்கே என்று தேடாதே... நாட்களின் வரையறைக்குள் இல்லையடி நம் வாழ்வு! பூக்களைப் பார் மாலையில் மரணம் என்றாலும் காலையில் இதழ்விரித்துச் சிரிக்கின்ற பக்குவம் அதற்கு... அதனால் தானடி மீ்ண்டும் மறுநாள் காலை மறுபடியும் உயிர்த்தெழும்! கவனி... பூக்களுக்கு மரணமில்லை! ஆகவே, நாட்களை எண்ணி கைவிரல் சோராதே! மறுநிமிட சந்தோசத்திற்காய் இந்த நிமிடம் கொல்லாதே! கண்ணே... நெஞ்சில் இருத்தி நினைக்க கற்கண்டு நினைவுகள் நிறைய உண்டு! யன்னல் திற இதமான காற்றுன் இதயம் தடவட்டும் ஏனெனில் அந்தக் காற்றைத் தான் நானும் சுவாசிக்க வேண்டும்!

தைப் பொங்கல் வாழ்த்துக்கள்....

----- வடிவமைப்பு : சுசி நடா

பொங்கும் மங்களம் எங்கும் தங்கட்டும்!

1997 இல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற பொங்கல் கவியரங்கில் பாடப்பட்ட கவிதை இது. பொருத்தப்பாடு கருதி இப்போது பதிகின்றேன்.   புது வருஷம் ஒன்று புஷ்பமாகுது - அதில் ஒரு நிமிஷம் கூட அர்த்தமாகுது ஆண்டு பல கண்டோம் - அதில் என்ன சுகம் கொண்டோம் வேண்டும் வரம் வேண்டி நின்றோம் '97 இன் உதயத்தையே தொழுது நின்றோம் தையே நீ கிழிந்த மனங்களை தையேன் வெய்யோன் கண்டு அஞ்சாதே அவனுன்னை வையான் பையவே வருவாய் நல்லதே தருவாய் மின்னலே உன்னைத் தொழுதேன் என்னுள்ளே புகுவாய் கோடிப் பிரகாசம் கூட்டுவாய் 'தை' என்ற தையலுக்கு தாலி கட்டவென்றே 'வெய்' என்ன வெய்யோனும் வேளை பார்த்து நின்றான் மை பூசும் தையலவள் சுடர் வீசும் சுந்தர புருஷனுடன் ஜோடி சேர்ந்து நின்றாள் 'பொங்கல்' என்னும் இன்பவிழா தந்தாள் புதுநெல் அரிந்தெடுத்துப் பக்குவமாய் குற்றிப் புடைத்து குறுநெல் நீக்கி புதுப் பானை தனை அடுப்பேற்றி பால் பொங்க... அது கண்டு... மனம் துள்ள... பெண்டுடன் வண்டுறங்கும் புதுமலரில் பட்டுச் சிரிக்கும் சுடர் கதிரை உண்டி உண்ண, அண்டி வருகவென்று அருகழைத்து மண்டி நிற்கும் மகிழ்ச்சி தன்னைக

கவிதைகள் - அட்டவணை

…புதுப்பிக்கப்பட்ட திகதி  : 28 ஆனி 2014 பிரிய சிநேகிதி...! பாவம் காற்று...! சிவன் வந்தான் நான் அரசியல்வாதி! சாவுக்கு ஒரு தூது! நவ நங்கை! மலர் வனம் வாடியதேன்? எனக்கு தூக்கு மேடை... உனக்கு நாடக மேடை...! காணவில்லை! யன்னல் நிலா முகங்கள் சீர்திருத்தங்கள்! அழகிய இளவரசி இவள் எப்படி? அத்தை மகள் சோகம் நெஞ்சு பொறுக்குதில்லையே.... சகோதரிக்கு... வாராய் சித்திரையே... சமா(ர்)தானம்! இன்ப வதை... காதலர் தினத்தில் எழுதிய கவிதை... ஈழக் கனவு கனவுப் பெண் இறைவனுக்கு எச்சரிக்கை என் தேவி கண்மணிக்குள் சிக்கிய பெண்புறா பொய்யில் நிஜங்கள் சிறை வாழ்ந்தென்ன லாபம்? இறந்தது போதும்! தம்பிக்கு... நினைவுக் கவிதை [19-07-2007 மூன்றாம் ஆண்டு நினைவு] பலியாடுகள்! கற்கண்டு இதழ் சுவைப்பது எப்போது? பகையோடும் வேளை! காதல் பிரிவு - சில கீற்றுக்கள் சுடும் நினைவு ஏய் பகையே... அடாது செய்தாய்! தீப ஒளி வாழ்த்துகள்... இவன் ஒரு ச