புது வருஷம் ஒன்று புஷ்பமாகுது...
எத்தனையோ கனவுகளைச் சுமந்து கொண்டு எனக்குத் தெரிந்த மொழியில் கிறுக்கி வருபவன் நான். அந்தக் கிறுக்கல்களை பொறுமையோடு ரசித்து கருத்திட்ட அன்பர்கள் சிலர். கருத்திடாமலே மானசீகமாக வாழ்த்திய அன்பர்கள் பலர்... எங்கிருந்தோ ஒரு உள்ளம் ரசிக்கும் என்ற ஆர்வத்தில் தான் பதிவிடுகிறேன்... இந்த ஆர்வம் பிறக்கின்ற ஆண்டில் இன்னும் பெருக வேண்டும்... இன்னும் பலப் பல எழுதவேண்டும் என்பது என் அவா... அன்பர்கள் தொடர்ந்து அடியேனை ஊக்கப்படுத்தவேண்டும்... குறை நிறைகளை விமர்சிக்க வேண்டும்... புதிய ஆண்டு... புதிய தீர்மானங்கள்... புதிய கனவுகள்... எல்லோர் கனவுகளும் கால் முளைத்து, பிறக்கின்ற புத்தாண்டில் நடக்க வேண்டும் என்று வேண்டுகிறேன். வாழ்த்துக்களுடன் கவி ரூபன்.