சோகம்
கண்ணெதிரே வந்து நின்று களிப்பூட்டும் காதலியைக் காணவில்லை வெறிச்சோடிக் கிடக்கும் ஊரின் நிலை மாறவில்லை தேரில் வரும் சாமியைக் கும்பிட வழியில்லை ஆமி செய்யும் அட்டகாசம் ஓயவில்லை சமாதானம் சமாதானம் என்று வீண் கோஷம் போடுவதில் அர்த்தமில்லை எல்லோரும் சமமென்று நினைக்கும் வரை நிம்மதியொன்றில்லை விண்மதியின் ஒளியினில் குளிர்ச்சியில்லை தன் மதி தான் தனக்குதவி என்று உணரும் வரை வளர்ச்சியில்லை விலைவாசி குறையவில்லை மலைவாசி சிறப்புடன் வாழவில்லை எந்தவாசியும் எமக்கில்லை - சிவன் ஆசி மட்டும் இருந்தால் தொல்லையினி இல்லை மனிதனை மனிதன் புரிந்து கொண்டால் ஓர் சண்டையில்லை எல்லை கேட்டு போரிடவும் தேவையில்லை சாதிகள் ஆதியில் இருந்து வந்தவையில்லை சாமிகள் சாதியை உண்டாக்கவில்லை பூமியே நீயேன் இன்னும் நித்திரையின்று விழிக்கவில்லை? பணம் உள்ளவரை நித்திரையில்லை நிம்மதியில்லை பணம் இல்லையெனில் வயிற்றுக் குணவில்லை மகிழ்சியில்லை அன்பில்லையெனில் ஆத்ம சுகமில்லை ஆதிதன்னை அகத்துள் நினைத்திருந்தால் ஆபத்தொன்றினியில்லை அச்சமென்பதில்லை ஆனந்தம் வேறில்லை