Posts

Showing posts from 2007

வருக புத்தாண்டே...

Image
நடந்து சென்ற 2007 நன்மை பயக்கவில்லை நாடி வந்த 2008 ஏ நன்மை பல கொண்டு வா! அழுகையும் அவலமும் அனுதினம் கேட்ட செவிகளுக்கு சிரிப்பும் மகிழ்ச்சியும் தினம் தினம் கொண்டு வா... நடந்த போர்களில் போன உயிர்கள் உடைந்த மனங்களுடன் ஓடிய மக்கள் கிடைத்ததை உண்டு ஏப்பம் விட்ட பரிதாபங்கள் அனைத்தும் அலையில் அகப்பட்ட துரும்பாய் ஓடி மறைந்திட ஓர் புது வழி சமைத்து வா! தாய் ஓர் இடம் தனயன் ஓர் இடம் வாழ்ந்திடல் தகுமா? ஊர் ஓர் இடம் உற்றார் உறவினர் ஓர் இடம் - நான் மட்டும் இங்கு வாழ்தல் முறையோ? பெற்றமும் கன்றும் பிரிந்து வாழ்ந்தால் பாசமும் அன்பும் தான் விளைவதெங்கே? சொல் வீரராய் இருப்பார் செயல் வீரராய் ஆவதெப்போ? உள் மனதில் உறங்கிய கனவுகள் உயிர் பெற்று வாழ்வது தப்போ? கல் மனத்தார், கொலைக்கஞ்சார் கணப்பொழுதும் வாழ்தல் ஏற்போ? சொந்த ஊரில் சொற்பமும் சுகமாய் வாழமுடியாத வாழ்க்கை சத்தோ? சிறுமையும் பெருமையும் இடம் ஒவ்வா இடத்தில் உரைத்திடல் தகுமோ? சென்ற ஆண்டு சேர்த்து வைத்த சோகங்கள் வந்த ஆண்டு நீ தீர்த்து வைத்தல் வேண்டும் வருங்காலத்தில் ஓர் வலது காலாய் நீ தடம் பதித்தல் வேண்டும் பின்னும் நீ சமாதான வீணைகளை மன

புதுவருட வாழ்த்துக்கள்... ;-)

உங்கள் வலைப்பூவில் இணைக்க கீழுள்ள நிரலை பிரதிசெய்யுங்கள்... <embed pluginspage=" http://www.macromedia.com/go/getflashplayer" src="http://kavipura.itbridgelk.com/blog_movie/new year greetings.swf" type="application/x-shockwave-flash"></embed>    

என் தேசம்

குருதி ஓடையும் பிண வாடையும் என் தேசத்து தெருக்களில்... உயிர் சுமந்து இருப்பதில் சில சுமந்து இடையில் குழந்தை சுமந்து நடையில் என் தேசத்து எல்லை கடக்கின்றனர் மக்கள்! என் மண்ணின் உயிர் ஆயிரமாயிரம் 'பூட்ஸ்' கால்களின் காலடியில் நசுங்குண்டு சுதந்திர தாகத்தோடு காத்திருக்கிறது! பலிகள் பல கொடுத்து நரிகளின் ஊளை கேட்டு பரிகளாகி மேனி விடைத்து அரிகளின் தேகத்தை 'ரவை' களால் கிழித்து கரிகாலன் கண்ணசைவில் பாய்கின்றனர் புலிகள்! இருந்தும் அரசு கட்டில் அமர்ந்திருக்கும் ஆந்தைகள் அலறும் ஒலி கேட்டு காது பொத்தி 'அடைத்த செவியினர்' ஆக வெளிநாடுகள்! படை மட்டும் நடாத்தி கிடைப்பதல்ல வெற்றி! சடை நிறைய ஈரோடு பேன் ஓடும் அரசியல் அரங்கமேறி உரை செய்தெம் ஞாயம் சரியென செவிகள் தோறும் சொல்லி மரை கழண்ட எம் நாட்டு அரசியல் வாதிகளின் செவிகள் திருகி ஞானம் தருவதே வெற்றி! நான் ஒரு கோழையாய் சில சேதிகள் சொன்னேன்! ஆனாலும் மறுபடியும் மனசுக்குள் கனவொன்று விரியும்... அது என் கடவுச் சீட்டில் என் நாடு 'தமிழீழம்' என்றிருப்பது!   -------------------- புரட்டாதி 2007

2008 இல்...

Image
     காலக் கலண்டரில் ஒருநாள் கிழிக்கப்பட ஓராண்டு ஓடிப் போனது! வெளிநாட்டிலிருந்து வரும் அப்பாவை எதிர்பார்க்கும் குழந்தை போல நானும் புதுவருட எதிர்பார்புடன்... வழக்கப் போல "இந்த வருஷத்திலாவது செய்யவேண்டியவை" என ஒரு பட்டியல் ரெடி... கண்மடலில் காதல் எழுதி வருவாள் ஒரு வஞ்சி... நேர்த்திக்கடன் செய்தவைபோல மொட்டத்தலையோடு முணுமுணுக்கும் என்னூர் மரங்கள் துளிர்க்கும்... இரத்தத்தில் உடல் நனைந்து... வெட்க்கத்தில் முகம் மறைத்து... ஏக்கத்தில் வாடும் வெண்புறா... சிறகு கழுவி உலர்த்தும்... புண்பட்ட ஈழ மண்ணின் காயங்கள் ஆறும்! "Gun" இல் பூக்காது சமாதானம் "கண்"கள் திறக்கட்டும் இனியாதல்... உதட்டில் ரெடிமேட் புன்னகை வழக்கமான ஹலோ... என்ன இது நாமும் இயந்திரமாய் ஆகிப் போனோமா? வாருங்கள் தோழர்களே... போலிகளை களைவோம்... சபதம் செய்வோம் சத்துள்ள உலகம் செய்ய...!

மனசு எனும் மந்திரக்கிண்ணம்!

ஒலி வடிவம் : நெஞ்சில் ஓர் மூலையில் ஏதோவொரு சோகம் எனை அணைக்கும் உடம்பு சோர்வின் கைப் பிள்ளையாகும்! மனசு விரக்தியின் விளிம்பில் தற்கொலை செய்யும் எதிர்காலம் கண்முன் விஷ்வரூபமெடுக்கும் தனிமையில் தத்தளித்து தாய் மடி தேடும் மனம் பொல்லாத கற்பனைகளால் இதயம் வெடிக்கும் தலை கோதி நெஞ்சில் முகம் சேர்த்து அணைக்க ஓருயிர் வாராதா என விழிகள் தேடும்! "எனக்கு மட்டும் ஏன் இப்படி" கண்முன் தெரியா கடவுளிடம் விசாரணை நடக்கும் கால் போனால் ஊன்றுகோல் மனசு உடைந்தால் என்ன உதவும் ? "நம்பிக்கை" என்ற பழகிப்போன பதிலில் சமாதானம் ஆகாமல் போலியாய் சிரிக்கும் உதடுகள்... விநாடிகளை விழுங்கி காலம் கன கதியில் பறக்கும்! சூரிய தேவன் இரதமேறி ஒளிக்கைகளால் பூமிப்பெண்ணை தொடுவான் மனசு இலேசாகிப் பஞ்சாகப் பறக்கும்! 'ம்..." புரியவில்லை தான் எனக்கும்!

பருவகால வாழ்த்துக்கள்...

உங்கள் வலைப்பூவில் இணைக்க கீழுள்ள நிரலை பிரதிசெய்யுங்கள்... <embed pluginspage=" http://www.macromedia.com/go/getflashplayer" src="http://kavipura.itbridgelk.com/blog_movie/greet.swf" width="165" height="250" type="application/x-shockwave-flash"></embed>

இவன் ஒரு சிவன்!

இவன் ஒரு சிவன் புலியாடை அணிந்தவன்! சூலம் சிவனது ஆயுதம் சுடுகலன் இவனது ஆயுதம் பூதகணங்கள்  புடை சூழ வருபவன் சிவன் சேனைத் தலைவர்கள் தனைச் சூழ வருபவன் இவன்! நஞ்சுண்ட கண்டன் அவன் நஞ்சைக் கழுத்திலே கட்டிய வீரன் இவன்! சுடுகாடு சிவன் நடமாடும் வீடு பலநாடு இவன் புகழ்பாடும் பாரு! சிவன் பாத தொழ அறுபடும் பிறவித் தளை பிரபாகரன் பாதம் தொடர நமதாகும் நாளை விடுதலை!

தீப ஒளி வாழ்த்துகள்...

Image
காலம் யார் பற்றியும் கவலைப் படாமல் தன் சுழற்சியில் கவனமாய் இருக்கிறது. வருடம் தோறும் பல நூறு பண்டிகைகள் ஒவ்வொரு இனச் சமூகத்திற்கும் சொந்தமாக இருக்க... நம்மவரும் பல பண்டிகைகளை ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பது வழமை. தீபாவளி தமிழர் பண்டிகையா என்கின்ற வாதத்தை எல்லாம் ஒதுக்கிவிட்டு அது தருகின்ற செய்தியோடு ஐக்கியம் ஆவது நன்மை பயக்கும்.   அதர்மம் தலை தூக்கும் போதெல்லாம் அதை அழிக்கக் கூடிய வல்லமையோடு சக்தி ஒன்று தோன்றும். அதன் பின்னர் ஒளி மயமான வாழ்வு கிடைக்கும்... இன்றைய காலத்தில் தீபாவளி தருகின்ற செய்தி அர்த்தம் நிறைந்தது. ஏதேனும் ஒளி பிறக்குமா?   எதிர்பார்ப்புடன்... இக்கவிதை...     பாவம் படர்ந்த வாழ்வது தொலைந்த தீபாவளி! தீண்டும் துன்பமெல்லாம் சுட்டுப் பொசுங்கும் இனி! திரைகடல் மீதில் தீபம் விடுவோம் - அந்தத் திங்களவனை விருந்துக்கழைப்போம்! வீணை தீண்ட விரல்கள் என்போம் விசைகள் தீண்டும் விரலை அவிப்போம்! பாசாங்கில்லாப் பெண்ணை மதிப்போம் பழகுவதற்கினிய அன்பை வளர்ப்போம் போருக்கு ஒரு போர்வை கொடுப்போம் வெள்ளைப் புறாவை எங்கும் பறக்கவிடுவோம்...   ___________________________________________

தீபாவளி வாழ்த்துக்கள்...

Image

ஏய் பகையே... அடாது செய்தாய்!

Image
காலை வந்தது காபி வந்தது நா இனிக்கவில்லை! சேதி கேட்டதும் உள்ளம் உடைந்தது யாருக்கும் புரியவில்லை! ஆதி முதல் தலைவன் கூட இருந்த ஒருவன் பாதி வழியில் போவான் என்று யார் அறிவான்? பாவி ஒருவன் செய்த செயல் ஆவி துடிக்க வைத்ததம்மா! சிரிக்கின்ற ஒரு புலி எரிகின்ற தீயில் வேகுதம்மா! தெரிகின்ற ஈழத்துவாசல் பார்க்குமுன் விரிகின்ற சிரிப்படக்கி பறந்தாயே செல்வா...! முதலில் ஒரு சிங்கம் போனது இப்போது ஒரு புலியும் போகுது வலியும் வஞ்சகமும் எம் ஈழப்பாதை எங்கும் விரிந்தே கிடக்குது! தமிழ்ச் செல்வா... வலிக்குது நெஞ்சம்... கோபத்தின் கொந்தளிப்பில் எரியுது உள்ளம்... ஏய்! பகையே அடாது செய்தாய் விடாது எம் வீரர் பகை! இன்னொரு பெரும் தோல்விக்காக காத்திரு! ------------- 03-11-2007 (படம் உபயம் : pathivu.com. நன்றி)

படம் பார் கவி எழுது - I

Image
கீழே இணைக்கப்பட்டுள்ள படம் பார்த்து கற்பனைக் குதிரைகளை தட்டி விடுங்கள். வடிவான கவிதைகள் இணைக்கப்படும்...  

சுடும் நினைவு

கண் மூடி உள் நினைக்க படம் போல உன் நினைவு விரியும்! தடம் மாறி பல மனம் மாறி அலைந்த என்னை உன்னோடு அணைத்துக் கொண்டாய் உள்ளத்தில் அமிர்தத்தை தெளித்துச் சென்றாய் வனம் போல் இந்த மனம் பல மிருகங்கள் அதில் நடமாடும் உன்னிரு கரம் பட்டதாலே அவை சாந்தமாகிச் சாதுக்களான விந்தையென்ன? உருவத்து அழகில் மயங்குவது சில மாதத்தில் முடியும் உள்ளத்து அழகில் வாழ்நாள் உள்ளளவும் மயங்கலாம் என்று உன்னாலே அறிந்தேன்! நில்லாத உயிர் நிலைக்காத வாழ்க்கை எல்லாமே புரிகிறது நீயில்லாத வாழ்வை நினைக்க நினைவெல்லாம் சுடுகிறது! திட்டுவது போல் பாசாங்கு செய்வதும் சற்றே என் முகம் வாடினால் 'என்னடா' என்றென்னைத் தழுவி அணைப்பதும் 'இன்னும் கொஞ்சம் திட்டேனடி' என்று ஏங்க வைக்குமே! சொல்லச் சொல்ல ஊறுதடி பல நினைவு உன்னை நினைத்திருக்கின்ற சுகம் பெரிது!

காதல் பிரிவு - சில கீற்றுக்கள்

கடற்கரையில் நாம் நடந்த சுவடுகளை கடலலை அழிக்கும்! கண்ணே நீ என் இதயத்தில் நடந்த சுவடுகளை யாரழிப்பார்? *********** மனசுக்குள் மத்தாப்புக் கொளுத்தியவள்... மனசையே கொளுத்துவாள் என்று யார் அறிவார்? *********** வீணை அங்கே விரல்கள் இங்கே இராகத்தை மட்டும் ஏனடி திருடிக் கொண்டாய்? *********** என் இதயச் சுவற்றில் உன் ஞாபகச் சிலுவைகள்! எப்போதடி உயிர்த்தெழும்?

பகையோடும் வேளை!

ஓயுதல் தீருமடா புதியதோர் ஒளி பிறக்குமடா! பாயுதல் இன்றிப் பதுங்கியிருந்த புலி பாய்ந்தே சீறுமடா! சீயத்தின் பிடறி கிழித்து விளையாடி காயங்கள் ஆற்றுமடா! சிங்கத்தை கொடியில் தாங்கியதால் வீரம் வருமோடா? அடே மோடா... பாடங்கள் இன்னும் பல இருக்கு படிக்க! கூட்டங்கள் பல கூடி கூவிப் பிதற்றி நின்றோரெல்லாம் ஓட்டங்கள் விடுவர் ஆட்டங்களின்றி தலைவன் போடும் திட்டங்கள் கண்டு திசையெங்கும் வியந்தே நிற்குமடா! பயந்தே நடுங்கிப் பகை யோடுமடா விரைந்தே எமக்கொரு தனி ஈழம் உருவாகுமடா!

கற்கண்டு இதழ் சுவைப்பது எப்போது?

Image
துடைத்து வைத்த கண்ணாடி போல இருந்ததடி என் உள்ளம்! இப்போதெல்லாம் அதில் தெரிகின்றதடி உன் விம்பம்! சலனம் இன்றிப் பயணித்தவன் நான் என்னுள்ளே நீ வந்தபின் உன் பெயரை மனனம் செய்யப் பழகிக் கொண்டவன் மரணம் வரும் எப்போதோ நானறியேன் அதுவரை சரணம் என்றுன்னை அணைப்பேன் ஊரெல்லாம் ஏதேதோ கதைக்க நீயும் நானும் வாய்மூடி மெளனிகளாவோம் உன் மனம் நானறிய என் மனம் நீயறிய உதவாத கதையெல்லாம் எமக்கெதற்கு? சிந்தை சிதறாது காதலி முந்தை வினையெல்லாம் கூடி எம்மை அலைக்கழிக்கும் பந்தை பக்குவமாய் வெட்டி விளையாடும் கால்பந்து வீரனாவோம்! விந்தை எதுவுமின்றி விரண்டோடும் வினையெல்லாம்! கற்கண்டு இதழ் அங்கிருக்க கண்ணே நான் இங்கிருக்க எப்போது தமிழ்ச் சொற்கொண்டு விளையாடி உன்மேல் தள்ளாடி விழுவது? என்னப்பன் விநாயகன் மனசு வைக்கவேணும் தன் தம்பிக்கு உதவியது போல்!

பலியாடுகள்!

நிலமகளுக்கு உடல் நலக் குறைவு ஆதலால் வேண்டப் படுகின்றது மானிட இரத்தம்! தானம் செய்ய விரும்புவோர் யுத்த களம் வாரீர்! துப்பாக்கி வேட்டுக்கள் ஊன்,உடல் உருவ இரத்தம் பெறப்படும்! வைத்தியர்கள் இன்னும் வரையறுக்கவில்லை தேவையான இரத்த அளவை ஆதலால் நித்தம் மானிட இரத்தம் வழிகின்றது மண்மீதிலே!

நினைவுக் கவிதை [19-07-2007 மூன்றாம் ஆண்டு நினைவு]

Image
சின்னப் பெண்ணே நீ மறைந்து மூன்றாண்டாம் உன் நினைவு மட்டும் எப்படி இன்னும் எல்லோர் மனதிலும் முரண்டு பிடித்து முக்காலி போட்டு உட்கார்ந்து இருக்கின்றது? பக்கத்தில் இருந்து பார்த்துப் பழகியறியாதவன் நான்... இருந்தும் செவிவழி கேட்டு நிழற்படத்தில் பார்த்துத் தெரிந்த எனக்குள்ளும் எப்படி நீ விஷ்வரூபமானாய்? வாழ்க்கை விசித்திரம் தான் வந்து போகும் உறவுகளும் அப்படியே... யாரோ கிழித்த கோட்டில் நீயும் நானும் எப்படிச் சொந்தங்களானோம்? சாவு அருமையான விஷயம்! இறப்பது தெரிந்தும் 'நிரந்தர இருப்பு' அனுமதி பெற்றது போல செய்யும் செயல்களில் தான் எத்தனை முரண்பாடு? குட்டிப் பெண்ணே நினைவுச் செதில்கள் குற்றி கண்கள் குளமாகின்றது உண்மை தான் ஆனாலும் வெறும் வார்த்தை ஜாலங்களில் பாசாங்கு செய்யப் பிடிக்கவில்லை மறுபிறவி உண்டெனின், எனக்கு மகளாய் வந்து பிறவேன் மகிழ்ந்து விளையாடலாம்! எவ்வளவு அழகாய் முடிச்சுக்கள் விழுகின்றது... வாழ்க்கை அழகு தான் அவரவர் புரிதல் படி! பெண்ணே நினைவுக் கவிதை என்று நினைத்து தான் தொடங்கினேன் ஆனால் வாழ்க்கையின் வடிவான பக்கங்களைப் புரட்டத் தொடங்கிவிட்டேன் உதிருகின்ற பூக்களைப

பயணம்...

Image
பயணத்தோடு என் துக்கமும் காலாவதியாகிப் போனது... 'ம்...' பயணம் நல்லது பல முகங்களைப் படிக்கின்ற வாய்ப்பைத் தருவதால்... வேலையில் களைத்துப் போன மனசுக்கு குஞ்சம் கட்டி அழகு பார்க்க பயணம் நல்லது சிலருக்கு வாழ்க்கைத் துணை கூட கிடைக்கலாம்! பயணம் செய்வீர் இடங்களை மட்டும் கடக்காமல் மனங்களைக் கடந்தும்! பயணங்கள் உங்கள் கால் தடத்தை பதியாவிட்டாலும் நினைவுத் தடத்தை அழுத்தமாகப் பதிவு செய்யும் ஆகவே பயணம் செய்வீர் !!!

தம்பிக்கு...

நாளை நாளை என்றொரு நாளை எண்ணி மனம் வெம்பிப் போகாதே தம்பி - அந்த நாலுந் தெரிந்தவன் நடத்தும் நாடகத்தில் குறை சொல்லி மாளாதே தம்பி விதை விதைப்பதும் அது முளைப்பதும் உந்தன் கையிலா தம்பி? எல்லாம் இயற்கையின் கையினை நம்பி! கவலைகள் கிடக்கட்டும் காரியம் நடத்திவிடு மலைகள் எதிர்க்கட்டும் துணிவாய் இருந்துவிடு பிறந்தது இன்று வாழ்வது இன்று சாவதும் இன்றே என்று எண்ணி விடு துன்பங்கள் ஓடும் இன்பங்கள் கூடும் உல்லாசம் உன் மார்பைத் தொட்டுத் தொட்டுத் தாலாட்டும் கொண்டாட்டம் நாமெல்லாம் இன்று பூத்த மலர்க்கூட்டம் நமக்கு ஏது கவலை - ஊதடா உல்லாசப் பண்பாடும் குழலை நாமெல்லாம் இன்று பிறந்த மழலை  நமக்குள் இனி இருக்காதே கவலை!  

சிறை

சிறை விரும்பியோ விரும்பாமலோ எம்மவர்க்கு பரிச்சியமான ஒன்று... சுதந்திரத்திற்காக சிறை செல்பவர்கள் அல்ல பலரும் சும்மா இருந்து சுருட்டுப் பிடித்த அப்பு பாவம்... சிறு சில்லு சுற்றி விளையாடிய சிறுவனும் அங்கே... காரணம் புலிகளுக்கு வாகன ஓட்டியாம்... தனியாய் இருக்க பயமென்று அவனும் பிடித்தானோ? என்ன தான் என்றாலும் எம்மைப் பொறுத்தவரை சிறை சென்று வருவது ஒரு கெளரவம்! வெளிநாட்டில் தஞ்சம் கோரவும் வசதி... ஆனாலும் மனசுக்குள் தத்துவார்த்த விசாரணை ஒன்று... கிறில் வைத்த கம்பியால் ஏன் சிறைக் கதவுகள்? அப்பாவிகள் உள்ளிருந்து பொலிஸ் காரர் தான் சிறையில் என்று ஆறுதல் கொள்ளவா? ஆட்சியாளர்கள் கவனிக்க பூட்டிய சிறைக்குள் பிறந்த குழந்தையால் தான் கம்ச வதம்! புரியுமோ உமக்கு? புரிந்துவிட்டால் தனி ஈழம் எமக்கு!!!

வாழ்ந்தென்ன லாபம்?

வாழ்ந்தென்ன லாபம் என்றெனக்குத் தெரியாது தெரிந்ததெல்லாம் நான் உரைப்பேன் காது கொடுத்துக் கேட்பாய்... பூத்திருக்கும் என் மனசில் பூவொன்று வந்திருந்து காது மடல் வருடி கன்னத்தில் கனி முத்தம் கொடுத்து தேகம் தொட்டணைத்தால் கோடி இன்பம் என்பேன் வாழ்வதால் வந்தவின்பம் இதுவென்பேன் தாலி கட்டி என் சொந்தம் என ஆன பின் சில்லறைச் சண்டைகளும் சிணுங்கல் பேச்சுக்களும் கொத்தாக என் முடி கோதும் அவள் விரல் தரும் இன்பமும் வற்றாத வாஞ்சையோடு வடிவழகி எனக்குக் கொஞ்சம் ஊட்டி மிச்சம் தானுண்ண உருகிப் போகுமே என்னுள்ளம் இதற்கேது ஈடு? திங்கள் பத்தாக திங்களே என்னவள் வயிற்றில் வந்துதிக்க சிறு நிலவை பெரு நிலவு ஈன்றெடுக்க வண்டாகி சுற்றியலைந்த நான் தண்டாகி சிறு நிலவை என் கையோடணைக்க குளிர் புன்னகை செய்யுமே என் முத்தாகி வந்த சிறு பிஞ்சு எத்துணை யின்பம் இது... சொல்லிக் கொண்டு போக இது போல் பல கதை விரியும் என்னுள்ளத்தில் காத்திருந்து நீ கேட்பாயா?

இறந்தது போதும்!

காதலி வார்த்தைகளுக்கு வாள் வீசக் கற்றுக் கொடுத்தாய்! என் இதயச் சுவரில் எத்தனை கீறல்கள்... கீறல்கள் மேல் இதழ் தேடல்கள் நடத்து... என் வாலிப வானம் விடியட்டும்! குரலில் எதைக் குழைத்தாய்...? என் இதய நாளங்களில் குளுக்கோஸ் ஏறுகிறதே...! விழிகளில் சொருகிய வேல்களைக் கழற்று எத்தனை தடவை நான் இறப்பது?

காதலர் தினத்தில் எழுதிய கவிதை...

பெண்ணென்று பிறந்து கண் முன்னே அங்கம் அங்காங்கே காட்டி நடந்து கொல்லாமல் கொல்கின்றார் அம்மா கொழும்பில் எம் குலத் தமிழ்க் கிளிகள்! பிரான்ஸ், ஜேர்மன், சுவிஸ் என்று பறந்து கொட்டும் பனியில் கொட்டாவி விடக்கூட மறந்து அண்ணனுடன் அப்பா சேர்த்து அனுப்பும் பணம் கையில்லாச் சட்டை வாங்கவும் அங்கம் கொப்பளிக்கும் ஆடை வாங்கவும் உதட்டுக்குச் சாயம் அடிக்கவும் இன்னும் பலப்... பல... செய்யவும் வீணாகக் கரைகின்றது. இந்த 'மேக்கப்' பின் பின்னால் உள்ள உண்மை உருவம் அறியாது நீண்ட 'கியூ' வில் நிற்கின்றாரம்மா பாவம் எம் இளைஞர்! சில நாள் பின்தொடர 'சீ பாவம்' என அவளும் புன்னகைக்க பரிதாபத்தில் தொடங்கியது காதல் பிறகென்ன கையோடு கை சேர்ந்து நடக்குமளவு நெருக்கம் வந்தது. பஸ்சில் ஏறினால் அருகருகே உரசி இருத்தல் கிசு கிசுப்பாய் காதல் வசனம் இன்னும் சில சொல்ல முடியாத சங்கதிகள் பாவம் பக்கத்தில் இருப்பவர் கூச்சத்தில் நெளிவார். காதலுக்கு கண்ணில்லை என்பது சரிதான்! கோல்பேஸ் வந்ததும் கையில் குடை விரியும் ஒதுக்குப் புறமாய் அமர்ந்து கொள்வார்கள் என்ன செய்வார்களோ யாம் அறியோம்! அது மட்டுமா? திரையரங்கில் நுழ

ஈழக் கனவு

கொடும் தீ வந்தெம்மைத் தீண்டும் சுடும் போதெல்லாம் உண்மை தூங்கும் வெறும் வார்த்தை ஜாலத்தில் அறிக்கை பறக்கும்! உலகும் இவர் பேடித்தனம் கண்டு மெல்லச் சிரிக்கும்!   அழும் குழந்தையின் கண்ணீர் கண்டும் விழும் தலைகளின் வணங்காமை கண்டும் வெ(ல்)லும் எம் பகை என்றெம் வீரர் குரல் கேட்டும் உதடு சுளிப்பார் உண்மை மறப்பார்   கடும் கோபம் கிளறிவிட்டார் எம் குலப் பெண்மை பறிக்க வந்தார் போலிச் சமரசம் செய்து நின்றார் பொல்லாத போர்தன்னை வேர் ஊண்டித் தளைக்கச் செய்தார்   சாயம் மாறும் ஒரு நாள் ஞானம் வரும் பின்னாள்(ல்) ஈழம் வரும் பொன்னாள் காயம் மாறும் அந்நாள் எம் கனவு பலிக்கும் திருநாள்

கனவுப் பெண்

உள்ளம் பயந்து ஊமையாகுது கள்ளப் பெண்ணவளிடம் காதல் கொள்ளுது   கொடி முல்லையென ஆடி வருவாள் குயிலின் நாதமெனக் கூவி வருவாள்   செம்பருத்தி அவளென்னை ஊடல் செருமுனைக்கு* அழைப்பாள் பின்னே ஓடி வந்து என்னைக் கட்டி அணைப்பாள்   நீள் முடி கோதி நிம்மதி நாடி புன்னகை செய்வாள் பின்னே பெருநகை செய்து என்னை ஏளனம் செய்வாள்   முகத்திரண்டு கருவண்டு என்னை கிறங்கடிக்க வைக்கும் மூக்குத்தி மின்னொளியை மழுங்கடிக்கச் செய்யும்   பேனாவை எடுத்து சிந்தனைக் குதிரையை தட்டிக் கொடுத்து புதுக் கவிதை ஒன்று எழுத்தில் வடிப்பேன் பூவை அணைத்து உயிர்க் கவிதை ஒன்று மண்ணில் படைப்பேன். ________________________________ * செருமுனை - போர்க்களம்

இறைவனுக்கு எச்சரிக்கை

சமாதான தேவதை - நீ சமர் கண்டு சோர்வதா? அவமான அர்ச்சனை - நீ அருகிராமல் எங்கெங்கோ போவதே!   சுகமான வாழ்வது சுடராமல் அணைவதா?   சாவின் கரத்தில் உயிர் சடுகுடு விளையாடி மாய்வதா?   நிழலாக எம் கழல் தனை தொடர்கின்ற சுற்றமது சுவர்க்கமதை அணைப்பதா?   இமையாக நின்றெமை சுமையாக நினையாத அன்னை, அப்பனை அடுத்தடுத்து அவலமாய் இணைப்பதா?   தமையனாய் நின்றவர் தம்பியாய் வந்தவர் தமக்கையாய் அணைத்தவர் தங்கையாய்ச் சிரித்தவர் நீட்டி முழங்கிப் போக அனுமன் வாலாய் நீள்பவர் கவலை மறந்து, சிரித்து மகிழ்ந்து இந்நாட்டு மன்னராய் நின்றவர் அன்பென்னும் ஆகுதியில் உயிர்தனைச் சலவை செய்து அவலம் எதுவென மறந்தவர் பட்... பட்... எனப் பறக்கும் வேட்டுக்கு சட்... சட்... என மடிவோம் எனும் உண்மை மறந்தவர்   ஐயகோ... என்னென்று சொல்வேன் அவர் பட்ட அவலம்? மண்மீது வரிசையாய் கிடந்ததே அவர்தம் சடலம் இதுதானோ இறைவன் எழுதும் சாவுப் படலம்? இறைவா... என் கையில் நீ கிடைத்தால் நிச்சயம் மரணம்!

என் தேவி

விரிகின்ற எந்தன் நினைவதிலே திரிகின்ற ஒர் உரு உன்னையன்றி வேறெது குவிகின்ற உந்தன் இதழ்தனை இமைக்காமல் நோக்குங்கால் அவிகின்றதம்மா எந்தன் மனது! நடக்கின்ற நிலாவோ நீ? அட.... ட... ட... சுவைக்கின்ற பலாவோ நீ? தவிக்கின்ற மனமெங்கும் நீ தவிக்க விடலாமோ என்னை இனி? பிறக்கின்ற கவிக்குள்ளே உள்ள கரு நீ துடிக்கின்ற இதயத் துடிப்பினிலுள்ள சுதி நீ கடக்கின்ற ஒவ்வெரு நாழியும் நான் நினைக்கின்ற பாவையம்மா நீ மொத்தத்தில் மன்மதன் மனதில் நின்று விளையாடும் ரதிக்கு ஒப்பான மதி நீ!

கண்மணிக்குள் சிக்கிய பெண்புறா

கவிதை பிறந்த கதை : மாமன் மகள் பூப்பெய்திய செய்தி கேட்டு மலைப்பதியிலே (மலையகத்திலே) இருக்கும் மச்சாளை நினைந்து பிறந்த கவிதை ((கற்பனைக்)கவிதையை ரசிக்க உதவும் என்பதால் சொன்னேன்) மலைப் பதியிலே என் மனங்கவர்ந்த மங்கை மலந்திருக்கின்றாள் மணிப் புறாவே உன்ணணிப் பறவை - என் மனங்கவர் இளமை உற்றவள் பால் தூது ஏகாயோ? மல்லிகை சூடி மனதில் என்னை நிறுத்தக் கூறாயோ? சந்தனத்தின் சாயல் எடுத்து வெண்மதியில் முகமெடுத்து ஆனந்தத்தின் சுளையெடுத்து அழகூற இலங்கும் மங்கையவள் என் அண்டை வந்து இன்ப மூட்ட வேண்டும் காதல் கொண்ட ஏழை நெஞ்சம் பாவையவள் படுத்துறங்கும் மஞ்சமாக வேண்டும் காதல் கொண்டு அர்ச்சிக்க கன்னியவள் கருத்தொருமிக்க வேண்டும் காளை எந்தன் நெஞ்சம் களிப்பில் ஊர்ந்து இன்பம் காணவேண்டும் மணிப்புறாவே என் எண்ணப்புறா அப்பெண்புறா பால் செல்லத் துடிக்கிறது வழி ஒன்று கண்டு கூறமாட்டாயா?

பொய்யில் நிஜங்கள்

Image
கண்ணுக்குள் ஓர் மயக்கம் - உன்னைக் கண்டதாலோ? நெஞ்சுக்குள் இன்ப அலைகள் - உன் வருகை தானோ? காதினுள் தேன் பாய்கின்றது - உன் கிளிப் பேச்சுத் தானோ?   காலில் நடை தளர்கிறது - நீ அருகில் இருப்பதாலோ? உடம்பில் 'சாக்' அடிக்கிறதே - உன் கரம் மேனியில் படுவதாலோ? எங்கே நிஜத்தில் மேற்சொன்னதைச் செய் பார்ப்போம்?

சோகம்

கண்ணெதிரே வந்து நின்று களிப்பூட்டும் காதலியைக் காணவில்லை வெறிச்சோடிக் கிடக்கும் ஊரின் நிலை மாறவில்லை தேரில் வரும் சாமியைக் கும்பிட வழியில்லை ஆமி செய்யும் அட்டகாசம் ஓயவில்லை சமாதானம் சமாதானம் என்று வீண் கோஷம் போடுவதில் அர்த்தமில்லை எல்லோரும் சமமென்று நினைக்கும் வரை நிம்மதியொன்றில்லை விண்மதியின் ஒளியினில் குளிர்ச்சியில்லை தன் மதி தான் தனக்குதவி என்று உணரும் வரை வளர்ச்சியில்லை விலைவாசி குறையவில்லை மலைவாசி சிறப்புடன் வாழவில்லை எந்தவாசியும் எமக்கில்லை - சிவன் ஆசி மட்டும் இருந்தால் தொல்லையினி இல்லை மனிதனை மனிதன் புரிந்து கொண்டால் ஓர் சண்டையில்லை எல்லை கேட்டு போரிடவும் தேவையில்லை சாதிகள் ஆதியில் இருந்து வந்தவையில்லை சாமிகள் சாதியை உண்டாக்கவில்லை பூமியே நீயேன் இன்னும் நித்திரையின்று விழிக்கவில்லை? பணம் உள்ளவரை நித்திரையில்லை நிம்மதியில்லை பணம் இல்லையெனில் வயிற்றுக் குணவில்லை மகிழ்சியில்லை அன்பில்லையெனில் ஆத்ம சுகமில்லை ஆதிதன்னை அகத்துள் நினைத்திருந்தால் ஆபத்தொன்றினியில்லை அச்சமென்பதில்லை ஆனந்தம் வேறில்லை

நெஞ்சு பொறுக்குதில்லையே....

ரசமான பாடலொன்றை சுகமாக ரசிக்கையிலே மெதுவாக வயிற்றினைப் பசி கிள்ளும் இது தான் சமயமென்றறிந்து அந்த நாள் நினைவுகள் நெஞ்சினுள் விம்மும் காலைக் கருக்கலில் தான் எழுந்து சோலைக் குயிலின் நாதமதில் சிந்தை குளிர்ந்து... வேலைக்குள் விழுந்து காலைக்குள் உயிர் மீண்ட உத்தமனை ஒளிக்கரம் நீட்டி உலகுயிர் தன்னை உறக்கத்தின்று தட்டியெழுப்பும் தங்கமென தக தகக்கும் கதிரவனை "வா...வா..." என் தந்தாய் போல்வாய் என நாக்குழறி என் கரம் நீட்டி என்னுயிர் தன்னில் சந்தோஷக் கலவையிட்டு வரவேற்ற சுகமான நாளதுவும் சுட்டுப் பொசுங்கிப் போனதுவே...! மொட்டு மலரும் படபடவெனச் சிறகடிக்கும் சிட்டு வானவீதியில் உயரும் கட்டுக் காவல் தன்னில் இரவைக் கழித்த மந்தையினம் சிந்தை மகிழ்ந்து பச்சை நதியெனப் பாயும் வயல் தன்னில் தம் உறவைக் கூடி உல்லாசம் போகும் புல்லினம் தன்னோடு கைகுலுக்கி தென்றல் குசலம் கேட்கும் மெல்லினம் ஆன இடையினம் இறுக்கமாய் தண்ணீர்க் குடந்தனை இடைதனில் அணைத்து மெல்லெனக் கதைபேசி கொல்லெனச் சிரித்துப் போகும் நில்லெனக் கூவி தம் நண்பர் தம்மோடு கரம் சேர்த்து சிறார் இனம் பள்ளி சேரும் மெல்லென மறைந்த அந்தநாள் வாழ்வு தன்ம

ஒலி வடிவம்

வணக்கம் நண்பர்களே, இந்தப் பகுதியில் கவிதைகளை ஒலி வடிவில் தரமுயற்சிக்கின்றேன். முன்னேற்றகரமாக எப்படி மெருகேற்றலாம் என்பது தொடர்பாக உங்கள் கருத்துகளை வரவேற்கின்றேன்.... நன்றி. இல. கவிதை ஒலி வடிவம் 01 அத்தை மகள் 02 இவள் எப்படி? 03 மங்கை இவள் பேசினால்… 04 மனசு என்னும் மந்திரக் கிண்ணம் 05 நடந்த கதை!

சகோதரிக்கு...

தந்தையை இழந்த சகோதரிக்கு ஒரு தம்பியின் (கவி)மடல்... சகோதரி, யாரிவன் என்ற விசாரணைக் கோதாவில் இறங்காமல் தந்துவிடு உந்தன் சோகத்தின் ஒரு சிறு துளி தன்னை! அருமை அப்பா - உன்னை அழவைத்துப் பார்த்தறியாதவர்! இன்று கொடும் சோகப் பிணியில் விழும் எந்தன் சேய் என்ற நினைவிழந்து நிர்க்கதியாய் விட்டுச்சென்ற சோகம் யாரறிவார் உன்னையன்றி! ஆனாலும் சகோதரி உந்தன் சோகம் நானறிவேன்... சோகத்தின் சுவடுகள் உன்னிடம் மட்டுமல்ல - உலகில் கோடி மக்கள் உள்ளார் சொந்தம் சொல்ல! ஒருயிர் போனதன்று தேம்பியழுவதா குழந்தை போல? பாசப் பசையில் மறந்துவிடுவதா உந்தன் வாழ்வை மெல்ல? வேண்டாம் சகோதரி செய்வோமே புது விதி! பரிதாப வோட்டுக்கள் உந்தன் மனவங்கிக்கு தேவையில்லை உணராத மக்கள் கூட்டம் உள்ளமட்டும் உன் போன்றவர்க்கு விடிவில்லை! அதற்காக நீ பிடிப்பது சாவின் கரமில்லை! விழித்துக் கொண்டு துள்ளியெழு வேறு வழியில்லை! தந்தை கண்ட கனவுகள் உருப்பெறட்டும் உன்னால் நடக்காதது எதுவுமில்லை பெண்ணால் எழுந்துவா என் சகோதரி எவர்காகவும் காலம் இல்லை நீ அறி!

வாராய் சித்திரையே...

சித்திரையாள் நித்திரையோ? சிதைந்த எம் வாழ்க்கை காணலையே! எத்தனை சித்திரை பிறந்து வந்தது இத்தரை நன்மை நடந்ததா இதுவரை? புதுச் சித்திரை மாது நீ நன்மை நடத்த வந்த தூது நீ துவக்கினால் உயிர்கள் தூங்கியது போதும் தூங்கவை துவக்குகளை காட்டுமிராண்டுகளை ஓட்டு நீ உலகை விட்டு இரக்கமில்லா மனிதப் பிராணிகளை கொளுத்து நீ விசாரணை விட்டு இரத்த மழை பெய்யாது ஆக்கிவிட்டு சாமாதான கீதங்களை இதயவீணை தோறும் மீட்டி விட்டு உலகைப் பார் கார்ச்சியளிக்கும் கவலை விட்டு கதிரை விளித்துப் புதிரை அவிழ்க விடிவே நீ வாராய் விரைந்தே நீ வாராய் நடுச் சாமமானாலும் நரகக் குழியானாலும் நீயே எமக்குக் கதி இதுவே எமது துதி எட்டி நின்று ஒட்டிப் பார்க்காது அண்டி வந்து தொட்டுப் பாரேன் சரிகைப் புடவை நீ உடுத்தவில்லை சாமாதானப் புடவை உடுத்தியுள்ளாய் ஓ! அதனால் தானோ உனக்கு இத்துனை வரவேற்பு?! கையிலென்ன? வெள்ளையாய்... வெண்புறாவா? நன்று! நன்று!! நானிலம் எங்கும் பறக்கவிடு கவலை மறந்து வாழவிடு...

சமா(ர்)தானம்!

சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தில் எழுதப்பட்ட கவிதை என்பதை நினைவில் வைத்துக் கொண்டு கவிதைக்குள் செல்லுங்கள். ஏன் இவர்களுக்குத் தெரியவில்லை 'சமர்' தானம் செய்யப்படுவது தான் 'சமாதானம்' என்று! சடைத்த பனைகளின் தலைகோதிச் சிக்கெடுத்து விரல் இரத்தம் கசியப் புன்னகைத்த காற்றைப் போல நாங்களும்...! சிக்கெடுக்கும் முயற்சியில் வெளியாரும்...! சிங்காரக் கொண்டைக்காரி, தலை அவிழ்த்து உதறி ஈரோடு பேன் விரட்டு மட்டும் விடிவில்லை! காரோடு, கண்ணாடி மாளிகை கண்ணசைப்பில் காரியமாற்ற 'குண்டர்களின்' தோழமை! வேரோடு அறுப்பதாகப் பேச்சு! வெற்றுத் தோட்டா நமக்கா கூற்று? யாரோடு நமக்கென்ன பேச்சு...? தம்பி, போராடிப் புலிக்கொடியை ஏற்று!

இன்ப வதை...

எத்தனை அழகாய் சிரித்துவிட்டுப் போகின்றாய் நீ... இங்கே ஒருவன் சிறைப்பட்டதை அறியாமல்....! உந்தன் நினைவுச் சிலந்தியில் சிக்கிய என்னைக் கொஞ்சம் விடுவி... இரவுகளோடு நான் படும் அவஸ்தை போதும்! சிரிப்பில் கூட போதை இருப்பது எனக்குத் தெரியாமல் போய்விட்டது! "களுக்" என நீ சிரிக்கின்றபோது மனசுக்குள் எங்கோ உளுக்கிக் கொள்கிறது! புன்னகை கூட இத்தனை அற்புதமாய் இருக்கும் என்று நான் அறிந்ததில்லை மயில்பீலியாற் மனதை வருடுகின்ற மகா சுகம் "ரெடிமேட்" சிரிப்பை உதடுகளில் ஒட்டவைத்துக் கொள்பவர்களும் உண்டு அதற்கு ஒரு சாமர்த்தியம் வேண்டும் நீ, எல்லாம் கடந்து புன்னகையால் உதடுகளில் புதுக்கவிதை எழுதுபவள்! உன்னைக் கண்டு தானடி என் உதடுகளுக்குச் சிரிக்கச் சொல்லிக் கொடுக்கிறேன் பெண்ணே, போதும் நிற்பாட்டு உன் உதடுகள் குவிகின்றபோது சிறுமொட்டு பூவாகி "ருது"வாகும் மெல்லிய ஓசை மனதுக்குள் பூகம்ப அதிர்வுகளாக!

பிரிய சிநேகிதி...!

பிரிய சிநேகிதி, மன்னிப்பாய்...! மெளனத் தவம் கலைத்துச் சகுனம் பார்க்காது காதலென்னும் மாய வார்த்தை சொன்னேன்! உள்ளம் மூடி வைக்காது... பள்ளம் விழுந்ததடி உன் பார்வை பட்டென்றேன் நீயும் பட்டென பதில் சொன்னாய் என்னைச் சட்டென வெட்டி விட்டாய் சட்டென தேறிவிட்டேன் வெளியில் சிரித்தவாறு ஆனால் உள்ளம் இன்னும் வலியில் அழுதவாறு வெள்ளமென உவகை தோன்றுதடி உன்னோடு இருக்கும்போது! இதற்குப் பெயர் காதலென்று அர்த்தம் செய்தேன்! கடைசிவரை குற்றம் செய்தேன்! உன் கனவுக் கட்டிட வாசலில் கூட நிற்கத் தகுதியிருக்குமா எனக்கு? நீ நுழைவுத் தேர்வு நடத்தவில்லையே சிநேகிதி... ஆனாலும் சிநேகிதி என் அன்புக் கூட்டுக்குள் நீ இன்னும் சிட்டுக் குருவிதான்! நீ அதிலிருப்பதும் தூரப் பறப்பதும் உன் சிறகுகளிடம்... வாழ்க்கைப் பாதையில் முகம் மறக்கலாம் முகவரி மறக்கலாம் என் அன்பு தடவிய வார்த்தைகளை நினைத்துப் பார் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நேற்றைய பொழுதெதற்கு என்று சாட்டையால் அடிக்காதே... கடந்த காலங்களின் கனவுகள் முக்கியம்! என் வார்த்தைகளில் சில சமயம் வாள்கள் கட்டியிருப்பேன் உன்னைக் காயப்படுத்தவல்ல... கடைசி வரை என்னை ஞாபகப்படுத்த... பிரிய சி

பாவம் காற்று...!

----இது ஒரு ஜப்பானியக் கவிதை...... எப்போதோ படித்தது.... 'பூக்களைப் பறிக்காதே' என்கிறது எச்சரிக்கைப் பலகை! ஆனாலும் புற்றரை யெங்கிலும் பூக்களின் சிதறல்! காற்றைக் கோபித்துக் கொள்ளாதீர் பாவம் அதற்குப் படிக்கத் தெரியாது! ___________ யாழ் களத்தில் : http://www.yarl.com/forum3/index.php?showtopic=20970

சிவன் வந்தான்

சமாதான உடன் படுக்கை கையெழுத்தான ஆரம்ப நாட்களில் எழுதிய கவிதை... மீண்டும் வராதோ குறைந்த பட்சம் அந்தச் சமாதானம் என்ற ஏக்கம் அடிக்கடி என்னுள் வந்து போகும்.... சிவன் வந்தான் சிவனோடு அவன் மகன் குகனும் வந்தான் மூத்தவன் கணபதியும் அன்னை பார்வதியும் பிறிதொரு நாள் வருவதாக சேதியும் வந்தது! "என்ன திடீர் விஜயம்...?" என்றேன் "நாட்டில் சமாதானமாமே... அது தான் சும்மா சுற்றிப் பார்க்க வந்தோம்" என்றான் குகன் மயலிறகால் காது குடைந்த வண்ணம்... "கழுத்தில் நஞ்சு கட்டியவர்கள் சுதந்திரமாக நடமாடலாமாமே... அதுதான் நானும் வந்தேன்" என்றான் நீலக் கழுத்தை தடவிய வண்ணம் சிவன்...! பாம்பு பல்லிளித்தது மயில் தோகைவிரித்து அழகு காட்டியது "நல்லது தான் சமாதானம்..." வாய் முணுமுணுத்தது! ___________ யாழ் களத்தில் : http://www.yarl.com/forum3/index.php?showtopic=21122

நான் அரசியல்வாதி!

எனக்குள் ஒரு ஆசை உண்டு எவர் விரலும் எழுதாத கவிதனை எழுதிடும் தமிழ் பாஷை உண்டு என் முன்னே தெரிகின்ற என் மண்ணின் விதிதனை தெரிந்தும் தெரியாமல் இருக்கும் மனப்பக்குவம் எனக்குண்டு எம் மைந்தர் எம்முன்னே விண் மைந்தர் ஆகும் நிலை கண்டும் உயிர் கொடுக்கும் பிரமாக்கள் நாமில்லையெனச் செப்பும் சிறப்பான தொனியுண்டு! தமிழன் விதி எழுதும் பேனாவின் சில மைத்துளிகள் நாமென்னும் உண்மை பல காலமாய் மறந்ததுண்டு "நமக்கு நம்மக்கள் தான் முக்கியம்" இலட்சியப் பேனாவின் வியர்வைத் துளிகள் இப்படிப் செப்பியபோது நாமவர்களுக்கு சூட்டிய பட்டம் "பைத்தியம்" "நம்மக்கள் கஷ்டப்படுகிறார்கள்" இப்படி யாரும் சொன்னால் நான் சிரிப்பதுண்டு - ஏனெனில் அம்மக்களில் ஒருவனான நான் சுற்றம் சூழ சிறப்பாய் வாழ்வதை அவர்கள் மறந்தது கண்டு நாம் எம் கை கொண்டு மக்களை அணைப்பதில்லை... அறிக்'கை' எனும் கை கொண்டு நாமிருப்பதை மக்களுக்கு நினைவு படுத்திக்கொள்வோம் எம் மனதில் எம்மக்கள் நினைவு என்றும் எழுவதில்லை எம் நினைவே மனதில் இருப்பதால் கனவிலும் எம்மக்கள் நினைவு வருவதில்லை எம்மக்கள் நினைவு வருவது தேர்தலில் மட்டும் தான் -

சாவுக்கு ஒரு தூது!

சாவே சட்டென வந்தென்னை அணைத்துக் கொள் சகதி வாழ்க்கையில் தொலைந்திட விருப்பமில்லை மொட்டுக்களே உங்கள் குவிந்த உதடுகளை விரித்துப் புன்னகையுங்கள் பூப்பெய்திய பெண்களைப் பார்த்ததில்லையா? துடுப்பென இருசிறகு கக்கத்தில் கட்டிய பறவைகாள்! ஆகாய வீதியில் ஒன்று கூடுங்கள் மரணத்தின் முன்னால் ஒரு மகிழ்ச்சிக் கீதம் கேட்க வேண்டும் ஆங்காங்கே நரைத்த முடிகளை காட்டாது ஓடி மறையும் மேகங்களே... கறுப்புச் சாயம் பூசிக் கொள்ளுங்கள் மண்ணின் மார்புச் சேலை நனைக்க மழைவேண்டாமோ? அருமை நண்பர்களே அஞ்சலிக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யுங்கள்! உங்களில் ஒருவன் பிரியப் போகின்றான்! கனவுப் பயிர் வளர்த்தவன் காற்றினில் மெல்லக் கரையப் போகின்றான்! கற்பனைத் தேரேறி உலகை அளந்தவன் உருவழியப் போகின்றான்! சிரிப்பில் சிலந்தி வலை பின்னும் மங்கையரின் மாயம் இனிச் செல்லாது எந்தன் உயிர் இனி நில்லாது! அதோ யமதூதன்... 'வா' வென்று அழைக்கின்றான் உயிர்... மெல்ல... மெல்ல... உடம்புச் சட்டை கழட்டுகிறது! ம்... இப்போது தான் சுகமாய் இருக்கிறது! ___________ யாழ் களத்தில் : http://www.yarl.com/forum3/index.php?showtopic=20769

நவ நங்கை!

கையில்லாச் சட்டை! தணிக்கையில்லாத் தொடை! சாயச் சிவப்பில் சமாதியாகிப் போன உதடுகள்! புருவ மேட்டில் கருமேகக் குவியல்! இரவு உடையில் வீதி உலா! தேரொன்று நடப்பதாய் எம்மவர் கண்கள் இமையா(து) தவம் இயற்றும்! தடுக்கி விழும் இதயம் எடுக்கி அணைத்தால்(ள்) சொர்க்கத்தில் பயணம்! இளமை வெட்டி ஒட்டிய 'லேபிள்கள்' உற்றுப் பார்த்தால் எல்லாம் போலிகள்! உதடு பிரிந்தால் வார்த்தைகளுக்கு வலிப்பு எடுக்கும்! ஆங்கிலம் நிர்வாணம் ஆகும்! மூலையில் தமிழ் முக்காட்டுடன் மெல்ல விசும்பும்! பார்வை வண்டுகள் சிறகடிக்கும் ரோஜாவென யோசித்து மயங்கும்! குதிக்கால் உபயத்தில் உயர்ந்து விடுவார்கள்! குதிரை ஓடுவதாய் ஏமாந்து போவோம் அங்க ஆராய்ச்சி செய்ய எம்மவர்க்கு வசதியாய் கண்ணாடி உடை! விழியோடு அசையும் காமன் படை! நீள்முடிக்கு தேய் பிறை போலும்! நிமிர்ந்த பார்வைக்கு பஷ்பமாவதே எம்கதை காணும்! நாகரீகம் மீண்டும் பிறந்த இடத்தை நோக்கி! ___________ யாழ் களத்தில் : http://www.yarl.com/forum3/index.php?showtopic=20415

மலர் வனம் வாடியதேன்?

(முல்லை செஞ்சோலை வளாகத்தில் சிறீலங்காவின் வான் படையினரால் 61 சிறுமிகள் கொல்லப்பட்டதின் எதிரொலி... ) கண்மணிகள் சோலை மீது வான் பறவை பறந்தது! வடிவான வளர் இளம்பிறைகளை வாடி வதங்கச் செய்தது! தலைவன் அடி தாங்காது ஓடி மறையும் கோளைகாள்... பேடித் தனம் செய்தனீர்! - உம் கோர முகம் காட்டினீர்! கொலர் உயர்த்திக் கொக்கரிக்காதீர்... மலர்களைப் பறித்த உங்களுக்கு மரணப் படுக்கை ரெடி! 'கலர்' கனவு ஏதேனும் இருந்தால் தீர்த்துக் கொள்ளும்! உம் 'உயிர்'ப்பறவை பறக்குமடா சீக்கிரம்! அழுது வடிவதால் ஏதும் ஆகாது தோழரே! சர்வதேச அரச மேடைகளில் குருத்துகளில் குருதி பூசியவன் முக மூடி கிழிப்போம் மூச்சுத் திணறத் திணறக் கிழிப்போம்! இப்படி ஏதேனும் நடந்தவுடன் சோகமாய் கூடிக் கதைத்து அழுவதாக பாசாங்கும் செய்து வழமைக்குத் திரும்புவதே எம்மினச் சாபம்! காயம் பட்டவுடன் கத்துவதல்ல முக்கியம்! எமக்குள்ளேயே புலம்பித் திரிவதால் ஆவதொன்றுமில்லை! உலகின் பார்வையில் கொணர்ந்து உண்மை நிலை உரைப்பதே நலம்! தோழர்களே உள்ளத்தில் நெருப்பே

எனக்கு தூக்கு மேடை... உனக்கு நாடக மேடை...!

முன்னழகு முந்திவர பின்னழகு அசைந்து வர என்னருகே வந்தவளே காதல் கனிமொழி தந்தவளே எங்கையடி சென்றாய் நீ என்னை விட்டு? அசைந்துவரும் உன் இடையதிலே கட்டிவிட்டேன் என் மனமதையே மாயமாய் சென்று மறைந்தனையே நீ மங்கை தானா மறுமொழி கூறடியே தங்கம் என மின்னும் உடலோடு சொர்க்கம் எனச் சொக்கும் மன்மதக் கணையோடு அன்னம் என எழிலுறும் நடையோடு மொத்தம் இதுவென நித்தம் பருகிட கருவண்டு நானென ரோஜா நீயென - என் அர்ப்பணம் இதுவென தந்தனை நின் உடலினை பசியாற பணி செய்யும் பாவை நீயென மகிழ்ந்தனன் நான்... இதழதில் இதழ் வைத்து இன்பரசம் அருந்துகையில் மனமதில் கள்ளம் வைத்து நடித்தனையே நீயும் பாவி கொடும்பாவி என்னாவி துடி துடிக்க வைத்த மாபாவி என்னவாகி நான் போனேன்... திரளான மேனியதும் தளர்வாகிப் போனதுவே! துரும்பாகி, நூலாகி, உலையிடை கொதிக்கும் மெழுகாக ஆகி இப்போது நான்... என்னாகிப் போனேன்... பெண்ணாகி நீ வந்த பாவத்தால் என்நிலை இதுவாகிப் போனதுவே! கள்ளுக் குடங்கள் என இரண்டழகு காட்டிய போதையால் வந்த அழிவு இது பேதை என்று நின்னையே எண்ணி பாதை தவறிய பாவத்தின் பரிசு இது! எச்சில் வழி கடத்தினாய் எச்.ஐ.வீ யை வேடிக்கைக் காரி... இல்லை இல்லை

காணவில்லை!

காணவில்லை இடை(யை)! இடை, எதுவென்று அறியாதவர்கள் சிவன், 'கை' தாங்கும் உடுக்'கை'ப் பார்க்கவும் சிவன் யாரென்று சிந்திக்க முடியாதவர்கள் கவிஞர்களுடன் கலந்தாலோசியுங்கள் அவர்கள், "அது கற்பனையில் காணும் விஷயம்" எனக் கதையளந்தால் நல்லது... மறந்துவிடுங்கள் இல்லாத ஒன்றை ஏன் தேடுவான்? ___________ யாழ் களத்தில் : http://www.yarl.com/forum3/index.php?showtopic=20164

யன்னல் நிலா

யன்னல் ஓரம் மின்னல் எழுதும் வண்ண ஓவியம் கண்களிரண்டும் காளை என்னை அழைத்துப் படிக்கும் காவியம்! செம்மண் நிறத்தை கண்முன் நிறுத்தும் கன்னத் தாமரை! இதழ்கள் வடிக்கும் தேனைக் குடிக்கும் கருவண்டு ஒன்று அங்கே மோட்சங் கண்டு மச்சமானதே! செவ்விளநீரென்ன இரண்டு தனங்கள் செதுக்கி வைத்த சித்திரம்! இதழ் சிவந்த ரோஜாவென்று முள்ளிருக்கும் கள்ளியை முகர்ந்து பார்த்த முட்டாளம்மா! மிரளும் விளியில் மானை யொத்த பெண்ணவள், உலவும் உயிரை உறவு அறுக்க வைத்தாளே கலவும் வேளை காமத் தீயில் அவித்தவள் நிலவும் நின்று ரசிக்கும் வண்ணம் காதல் ரசம் செய்தவள் உலகும் அழியும் என்றாலும் எந்தன் உண்மைக் காதல் அழியாது என்றே கூறம்மா!

முகங்கள்

எனக்கே என்முகம் அடிக்கடி மறந்து போகிறது! கண்ணாடி கூட துலக்கமின்றி துக்கம் அனுஷ்டிக்கின்றது வயல் வரம்பில், ஏர்தடங்களில் வடலி முளைத்த பிட்டிகளில் என்று எங்கேயோ என் முகம் தொலைந்து போயிருக்கலாம் தேடி எடுத்து என் முகம் இதுவென அடையாளம் சொல்வதும் கஷ்டந்தான்! எத்தனை... எத்தனை... முகங்கள் அதில் என் முகம் எது? 'பூட்ஸ்' கால்களின் அடியில் புண்பட்டுத் துடிக்கின்ற முகங்கள்! 'ட்ரக்' வண்டிச் சில்லின் அடியில் சிக்கிச் சிதலமடைந்து போன முகங்கள்! இப்படிப் பல பல விதங்களில்... கண்களில் ஏக்கத்தை தாங்கி தூக்கத்தை தேடும் ஒரு முகம்! கண்ணீர் போடும் திரையோடு கால தேவனை நிந்திக்கும் ஒரு முகம்! கடைசியில் போவது கல்லறை தான் ஆனாலும் கட்டாய லீவில் அனுப்ப யாரிவர் என மனுப் போடும் ஒரு முகம்! கட்டிய சேலையை உருவும் துச்சாதன வாரிசுகள்! 'துடிக்காத மீசைகள்' போலியாய் பொய்க் கோபம் காட்டும்! கற்பென்ன கற்கண்டா கண்டவர் எடுத்துக் கொள்ள? நறுக்கென்று நாலு வார்த்தை எடுத்துச் சொன்னால் என்ன? எங்கள் முகங்களின் முகவரிகளை முடிந்தவரை படித்துப் பாருங்கள் புதிதாய் ஒரு பாரதம் செய்யலாம்! ஒருவருக்கு இத்தனை மு

சீர்திருத்தங்கள்!

சீர்திருத்தம்! சீர்திருத்தம்! கல்வியில் சீர்திருத்தம்! கலைக் கூடத்தில் சீர்திருத்தம்! அரசியலில் சீர்திருத்தம்! பொருளாதாரத்தில் சீர்திருத்தம்! நடைபாதையில் சீர்திருத்தம்! சீர்திருத்தம் பல புரிந்தனரடி கிளியே! எவர் சிந்தையில் சீர்திருத்தம் புரிந்தார்?

அழகிய இளவரசி

Image
கண்களைப் பறிக்கும் அழகு உலகை கட்டிப் போட்டதில் ஒன்றும் வியப்பில்லை. கமராக் கண்கள் தவம் கிடந்தன.உலகில் பல தடவை படமெடுக்கப்பட்ட ஒரே பெண்மணி! உலகைக் கட்டிப் போட்ட அந்த அழகு உடலை விட்டுப் பறந்த போது யார் தான் அழவில்லை? நான் அழுதேன்...!அழுதபடி கிறுக்கியது... பியோனோ வாசிக்கும் விரல்களில் கூட ஒரு புது இசை பிறந்து வந்தது - அது டயனாவின் ஆத்மாவை ஆராதிக்கும் ஆலாபனை என சொல்லாமல் புரிந்தது கஜானா பல வேண்டி நின்றன - இந்த அழகுக் கஜானா தனை அள்ளத் துடித்தன மயான மடிதனில் பெருங் கஜானா மடிதனில் தவழ்ந்தவள் அமைதியாக உறங்குகிறாள் எங்களை உறங்கவிடாமல் விழிக்க வைத்து விட்டு!

இவள் எப்படி?

பார்த்தேன் கனைத்தாள் சிரித்தேன் விளி எனும் கருவி சுழற்றிச் சுட்டெரித்தாள் கதைத்தேன் வலையதில் துடிக்கும் மீனானாள்! ஆசைகளை தொடுத்தேன் கன்னம் கிள்ளியே முத்தமிட்டாள்! ஒலி வடிவம் : Your browser doesnot support to play தரவிறக்கம் : ivalEppadi.mp3 [128kb]

அத்தை மகள்

Image
ஒலி வடிவம் : Your browser doesnot support to play தரவிறக்கம் : aththaiMakal.mp3 [1.36MB] அத்தை - உந்தன் முத்தான மகளை அவள் மேல் பித்தான எந்தனுக்கு சொத்தாக்கும் எண்ணம் உந்தன் சிந்தையில் இன்னும் வித்தாகவில்லையோ? தயிர் கடையும் மத்தாக - எந்தன் உயிர் கடைகின்றாள் அத்தை உந்தன் செல்வ மகள் முகமதை முழுநிலா என்று சொன்னால் பூரணமாகாது ஏனெனில் முழுநிலா என்றும் முழுசாய் குளிர் விட்டுச் சிரிக்காது! தளிர் கரம் கொண்டு பளீர் எனக் கன்னத்தில் அறைந்தாலும் பட படக்க மாட்டேன் அத்தை - அந்த பட்டு விரல்களின் பாஸையில் பல சங்கதி காண்பேன் அத்தை! கறுப்பு என்றென்னைப் பழிக்காதே அத்தை இராமன் முதல் அர்ச்சுனன் வரை கறுப்பில் கரை கண்டார் - ஆனாலும் யாரவரில் கறை கண்டார்? மேனி நிறம் பார்க்காதே அத்தை அன்பு நிறம் பார் திறம் திறம் என்று தித்திப்பாய்...! நாலெழுத்துப் படிக்கவில்லை என்று நகைக்காதே அத்தை ஊரோடு உலகறியும் நல்லறிவு எனக்குண்டெனும் ஓரறிவு உனக்கு வேண்டும் அத்தை! கையில் இல்லை நாலு காசென்று கலங்காதே அத்தை - எந்தன் கனவுக்கு உலகை நெய்யும் வலி உண்டென்று அறிவாய் அத்தை! பித்தம் கூடிப் பிதற்றவில்லை அத்தை நித்தம் ஆய்ந்து அறிந்