Posts

வாராயோ மீண்டும்...!

காசைத் தேடி  கால்கள் நடக்கையில் ஓசை படாது  ஓடி ஒளிந்தாள்  கூட நடந்த  கவிதைப் பெண்!   காதல் தோல்வியில்  நெஞ்சோடு தாங்கியவள்  கண்ணீர் துளிகளை  கவிதை வரியாக்கியவள்!   தனிமையில் தவித்த போது  இனிய உறவாய்  இதயத்தில் நடந்தவள்  இமைகள் உறங்க  தமிழால் தாலாட்டியவள்!    திசைகள் தோறும்  தேடிப் பார்க்கிறேன்  வீசும் தென்றலிடம்  விசாரணை செய்கிறேன்  யாரும் அறியவில்லை  உன்னை!   போதும் உன் புலம்பல்  என ஓடி வாராயோ​? காயங்கள் தோறும்  ஒத்தடங்கள் தாராயோ?    உன் தடம் பிடித்து  நிற்கிறேன்  என்னை உன்னிடம்  சேர்க்கிறேன்!   பெண்ணெ போகாதே எனை விட்டு... போகுமே என்  கவிதைச் செடி பட்டு...    மொட்டு விடட்டும்  மறுபடியும்  எனக்குள் கவிதை  எனைச் சுட்டு  எரிக்கும் போதும்  நீங்காதிருப்பது  உனக்கினி கடமை!

அன்னைக்கு ஒரு ஆறுதல்!

கார்த்திகை 27, 2014 அன்று படித்த கவிதை. வணக்கம் அன்னை தமிழுக்கு வணக்கம் தாய் மண்ணிற்கு வணக்கம் தலைவன் தாளிற்கு வணக்கம் மற வீரா் கல்லறைக்கு வணக்கம் அநாதையாகி நிற்கும் பெண்ணே… ஆதியிலே இருந்தவரெல்லாம் பாதியிலே போவார் என்று யாரேனும் சொன்னதுண்டா? வீதியிலே நிற்கின்றாயே அம்மா… விதி வந்து நின்றால் கலங்க மாட்டோம் சதி செய்து வாசலில் நின்ற பகை முற்றத்தில் பாய்ததே அம்மா…! கக்கத்தில் இருந்த பிள்ளையும் கருவிலே உருவான மகவும் சொர்க்கத்தில் கட்டாய இடம் தேடிக் கொண்டன! கற்றைக் கூந்தலது வாரி பல வண்ணப் பூக்கள் அதில் சூடி நெற்றித் திலகமது ஒளிர மங்களமாய் நின்ற பெண்ணே… சொந்தங்களை நீ இழந்தாய் மடி நிறையக் கொண்ட செல்வமதுவும் இழந்தாய் துடிப்பாய் நின்று உன் மானம் காத்த மறவரையும் இழந்தாய் தூய தமிழ்ப் பேச்சினை இழந்தாய்! துட்டர்களின் “பூட்ஸ்” கால்களின் அடியில் மிதிபட்டுக் கிடக்கின்றாயே அம்மா… உன் கண்ணின் ஈரம் எப்படித் துடைப்போம்? உன் நெஞ்சின் பாரம் எப்படிச் சுமப்போம்! ஈழத் தாயே உன்னிடம் பெற்

விழும் இலைகள்!

Image
விழுந்த இலைகளை எண்ணி விழாத இலைகள் கவலை கொள்வதில் அர்த்தமில்லை! நாளையோ மறுநாளோ அவையுடன் அவையும்!

கோடுகள்

Image
கோடுகளுக்கு இடையில் மறைந்திருக்கும் ஓவியத்தை தேடுகிறேன்… சிறு கை கொண்டு இவள் கிறுக்குகையில் பல விதக் கோடுகள் வந்து பென்சில் கூரோரம் குந்தியிருக்கும் “அடுத்து நான்…” எனக் கெஞ்சித் தவிக்கும்! உருவம் ஒன்றெண்ணி இவள் வரைவதில்லை வரைந்த பின்னால் காணலாம் பல நூறு உருவம் நம் கற்பனை விசாலமெனில்!

என்னத்தை சொல்ல...?

இடம் தெரியாா் தரம் புரியாா் தகுதி கிடையார் பதவி வேண்டி வலம் வருவார் கிடைக்காது போனால் முகம் சுளிப்பார் காறி உமிழ்வார் இச்சனம் போல் எங்கேனும் கண்டதுண்டா? இலக்கு தான் முக்கியம் நம்மவர் செருக்குக் காட்டி "அவனா தலைவன்..." என கவனில் கல் வைத்தடிப்பார்! எதிரில் பல் இழித்து "ஐயா உம் போல் எவருண்டு..." என்றே நெளிவார்! "எனக்கேன் இல்லை அழைப்பு?" என்றே ஆயிரம் கேள்வி தொடுப்பார் அழைத்தாலோ பல கதை சொல்லிப் புளுகுவார்! பிரிந்து நின்று பருந்து போல் மொய்கின்றார் கூடிச் சேர்ந்து எறும்பு போல் அணிவகுக்க மறுக்கின்றார்! கூடிப் பலர் தேர் இழுக்காவிடின் சாமிக்கேது ஊர்வலம்? ஆசாமி இவனே சாமி ஆக நினைத்தால் அதுவன்றோ அநியாயம்! நோக்கம் ஒன்று அதை நோக்கி நடத்தல் நன்று! தன்னால் இயன்றதை தான் செய்யின் எல்லாம் சரியாகும் முடியாது போனால் கை தட்டுங்கள் தானாய் நடக்கும் எல்லாம்!

பிள்ளைத் தமிழ்!

கற்ற தமிழ் நான் மறந்தேன் உன் பிள்ளைத்தமிழ் கேட்கையிலே! சொற் தமிழில் எத்தனை சுவை இறைவா இவள் சின்ன இதழில் அது பிறப்பதாலே! அப்பன் மடியில் அமர்ந்து பிரணவப் பொருள் உரைத்தான் பால முருகன் அன்று குப்பன் இவனும் இன்று அப்பேறு பெற்றானே ஆனால் பொருள் தான் எதுவும் விளங்கலையே! விளங்காத போதும் குறையாத இன்பம் எனக்குள் நிறைகிறதே வாழ்வதின் இன்பம் இது தான் எனப் புரிகிறதே!

அணையா(த்) தீ!

Image
நீ எந்தன் வானம் நான் உந்தன் நீலம் ஏனிந்தக் கோலம் என் உயிரின் ஓலம் கேட்காதோ உந்தன் காதும்? கனவில் வருகிறாய் மலர்கள் சொரிகிறாய் எதிரில் மட்டும் ஏனோ என்னை எரிக்கிறாய்! நெஞ்சத்தில் உன்னை வைத்தேன் தீயென்று தெரியாது விட்டேன் அணைப்பது எவ்வாறு நீ வந்து அணைத்தாலும் அணையாது வளரும் தீ இது!